கிள்ளான் மேருவில் பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான்: மேரு, தாமான் மேரு,  லோரோங் மஹாங் 1 இல் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு வெளியே நேற்று  பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பணியில் இருந்த ரோந்துப் பணியாளர்களால் பிற்பகல் 3.37 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டதாக கிள்ளான் உத்தாரா மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார்.

இதனை அடுத்து உடனடியாக விரைந்த காவல் படை, அங்கு 46 வயதுடைய உள்ளூர்வாசி ஒருவர்  வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதைக் கண்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பின்னர் மருத்துவ பணியாளர்களால் அந்த நபர் இறந்துவிட்டதாக விஜயராவ் கூறினார்.
Seorang lelaki tempatan berusia 46 tahun ditemui mati ditembak dalam keretanya di luar sebuah kedai motosikal di Taman Meru, Klang. Polis menerima maklumat pada jam 3.37 petang dan siasatan sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *