அன்வாரின் செல்வாக்கு 1விழுக்காடு உயர்வு கருத்தாய்வு மையம் தகவல்!

- Muthu Kumar
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஏற்பு விகிதம் குறைவான அளவிலேயே இருந்தாலும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அது உயர்வு கண்டுள்ளது என்று மெர்டேக்கா செண்டர் கருத்தாய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரதமரின் ஏற்பு விகிதம் (மக்கள் செல்வாக்கு 55 விழுக்காடாக உயர்வு கண்டுள்ளது. அவரின் ஏற்பு விகிதம் ஒரு விழுக்காடு உயர்ந்திருப்பதை இது காட்டுகிறது என்று மடானி அரசாங்கத்தின் ஐந்தாண்டு பதவிக் காலத்தின் மையப் பகுதியில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு காட்டுகிறது.
இவ்வாண்டின் மே மாதத்தில் மெர்டேக்கா செண்டர் அந்த ஆய்வை நடத்தியது. அரசியல் நிலையற்ற தன்மை நிலவிய காலகட்டத்திற்குப் பிறகு மலேசியர்கள் இப்போது மீண்டும் நிலைத்தன்மையை அனுபவித்து வருவதாக உணர்கின்றனர் என்றும் அந்தக் கருத்தாய்வு தெரிவிக்கிறது.
கடந்தாண்டு டிசம்பரில் மெர்டேக்கா செண்டர் நடத்திய கருத்தாய்வில் அன்வாருக்காக ஏற்புவிகிதம் நான்கு விழுக்காடு உயர்ந்து 54 விழுக்காடாக அதிகரித்திருந்தது.
நாடு தற்போது ஒரு திடமான தடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை மலேசியர்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அன்வாருக்கு நாடளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அரசியல் கொந்தளிப்பு தணிந்துள்ளது என்றும் அந்த கருத்தாய்வு கூறியது. துறைசார் சீர்திருத்தங்களால் நல்லாட்சி மீண்டும் திரும்பும் எனும் நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பொருளாதார அம்சங்களும் சாதகமாக உள்ளன.
பணவீக்கம் மார்ச் 1.4 விழுக்காடாக குறைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் 4.4 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அது தெரிவித்தது.பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் பற்றித்தான் அதிகம் கவலையடைந்துள்ளனர். வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றியோ அல்லது அரசியல் உரைகள் குறித்தோ அவர்களுக்கு அக்கறை இல்லை என்றும் அது தெரிவித்தது.
இதனிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம் 40 விழுக்காடாக இருந்த கூட்டரசு அரசாங்கம் மீதான ஏற்பு விகிதம் இப்போது 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், ஓராண்டுக்கு முன்பு 58 விழுக்காடாக இருந்த கூட்டரசு அரசாங்கம் மீதான அதிருப்தி அளவு இப்போது 48 விழுக்காடாக குறைத்துள்ளது. மலேசியா சரியான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக 43 விழுக்காட்டு வாக்காளர்கள் கருதுகின்றனர். கடந்தாண்டில் அது 24 விழுக்காடாக இருந்தது என்றும் அந்த கருத்தாய்வு தெரிவித்துள்ளது.மே மாதம் 12ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் மொத்தம் 1,208 வாக்காளர்களிடம் அந்த கருத்தாய்வு நடத்தப்பட்டது.
Tahap penerimaan rakyat terhadap Perdana Menteri Anwar Ibrahim meningkat kepada 55%, menurut tinjauan Merdeka Center. Rakyat kini melihat kestabilan politik dan ekonomi semakin pulih, dengan inflasi dan ketidakpuasan terhadap kerajaan turut menunjukkan penurunan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *