செத்தியா மாலில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்!

- Shan Siva
- 18 Feb, 2025
செத்தியா சிட்டி மாலில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர் என்று நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் இன்று சுட்டுக் கொன்றனர்.
30 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர், கிள்ளான் பூலாவ் கெத்தாமில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிகாலை 3 மணியளவில் நடந்த தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமர் கான் கூறினார்.
சம்பந்தப்பட்ட நபரிடமிருந்த தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றினர்என்று ஹுசைன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் ஏந்திய ஏழு கொள்ளைகள் உட்பட ஒன்பது குற்றங்களின் பதிவை அந்த நபர் வைத்திருந்ததாக ஹுசைன் மேலும் கூறினார்.
சந்தேக நபர் சமீபத்தில் செட்டியா சிட்டி மாலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறதுஎன்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *