ஸ்கேம் மோசடியில் RM 3 லட்சத்தை இழந்த பெண்!

- Shan Siva
- 17 Jun, 2025
ஜார்ஜ் டவுன், ஜூன் 17: பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள
பொறியாளர் ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி RM300,000 க்கும் அதிகமாக இழந்துள்ளார்.
பாயன் லெபாஸில்
உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் 35 வயது சம்பந்தப்பட்ட பெண்ணை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMCயின் பிரதிநிதி என்று
கூறிக்கொள்ளும் ஒருவர் மார்ச் 25 அன்று தொடர்பு
கொண்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
குற்றச் செயல்கள்
தொடர்பான 33 போலீஸ்
புகார்களில் அப்பெண்ணின் தொலைபேசி எண்
சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேக நபர் அப்பெண்ணிடம் தெரிவித்துள்ளதாக ஹம்சா இன்று ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் அந்த
அழைப்பு சரவாக் போலீஸ் தலைமையகத்திற்கு" மாற்றப்பட்டதாகவும், ப தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்று
கூறிக்கொள்ளும் மற்றொரு சந்தேக நபரிடம் அந்தப் பெண் பேசியதாகவும் ஹம்சா கூறினார்.
விசாரணைக்குப்
பிறகு பணம் திருப்பித் தரப்படும் என்றும், இணங்கத் தவறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மிரட்டப்பட்டதாகவும் அப்பெண்
கூறினார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்
பயத்தின் காரணமாக மார்ச் 25 முதல் ஜூன் 9 வரை 14 வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM336,760 பணத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்ததாக ஹம்சா கூறினார்.
சந்தேக நபர் தனது
சேமிப்பு தீர்ந்துவிட்ட போதிலும் கூடுதல் பணம் கோருவதைத் தொடர்ந்து கேட்டபோது தான்
ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்தார் என்று அவர் கூறினார்.
பின்னர்
பாதிக்கப்பட்டவர் பாலிக் புலாவ் காவல் தலைமையகத்தில் புகார் அளித்ததாக ஹம்சா கூறினார்.
மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது!
Seorang jurutera wanita di George Town ditipu sindiket penipuan telefon yang menyamar sebagai pegawai MCMC dan polis. Mangsa menyerahkan RM336,760 ke 14 akaun bank kerana diugut ditangkap. Kes disiasat bawah Seksyen 420 Kanun Keseksaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *