இந்தியர்களை அவமானப்படுத்திய சோள வியாபாரி & மனைவி கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 18: இந்திய சமூகத்தினருக்கு எதிராக இனரீதியான அவதூறு வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவுப்பு வைத்திருந்த சோள வியாபாரி மற்றும் அவரது மனைவி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோத்தா வாரிசானில் நேற்று இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் காவல்துறை துணைத் தலைவர் ஷான் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.

60 வயதான அந்த நபர் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது 50 வயதான மனைவி மலேசியாவில் அதிக காலம் தங்கியிருந்தது கண்டறியப்பட்ட பின்னர் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டார்.

அறிவிப்புப் பலகைக்கான நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவ ஏழு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *