டாய்ம் மனைவியின் வெ.75.82 கோடி சொத்துகள் முடக்கத்தை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது!

- Muthu Kumar
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24-
முன்னாள் நிதியமைச்சர் டாய்ம் ஜைனுடினின் மனைவி நயிமா காலிட் மற்றும் அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பதின்மூன்று கோடியே இருபது லட்சம் பவுண்டு ஸ்டெர்லிங் (75 கோடியே 82 லட்சம் மலேசிய வெள்ளி) மதிப்புடைய சொத்துகளை முடக்கி வைக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அண்மையில் ஒருதலைப்பட்சமாக உத்தரவிட்டிருந்தது.
ஆயினும், அந்த உத்தரவை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அந்த வழக்கில் தலையிடக் கோரி நயீமா செய்திருந்த விண்ணப்பம் ஜூலை 9ஆம் தேதியன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதி அஸார் அப்துல் ஹமீட் நேற்று தெரிவித்தார். அச்சொத்துகள் 2001ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் 41ஆவது பிரிவின்கீழ் குற்றத்தன்மை கொண்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் அவற்றை முடக்கம் செய்யும்படி மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விண்ணப்பம் செய்திருந்தது.
லண்டனில் உள்ள அந்தச் சொத்துகளில் 5.52 கோடி பவுண்டு ஸ்டெர்லிங் மதிக்கத்தக்க இரண்டு வர்த்தகக் கட்டடங்கள், 7.71 கோடி பவுண்டு ஸ்டெர்லிங் மதிப்புடைய ஐந்து ஆடம்பரக் குடியிருப்புக் கட்டடங்கள், இல்ஹாம் ஃபவுண்டேஷன் எனும் அமைப்புக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
இதனிடையே, சிங்கப்பூரில் தமக்கும் குடும்பத்தினருக்கும் சகாக்களுக்கும் சொந்தமான 54.4 கோடி வெள்ளி மதிப்புடைய மூலதன நிதிகளை முடக்கம் செய்வதற்கு எம்ஏசிசி ஒருதலைப்பட்சமாக முயன்று வருவதை தடுத்து நிறுத்த நயிமா செய்துள்ள விண்ணப்பமொன்று ஆகஸ்டு முதல் தேதியன்று விசாரிக்கப்படவுள்ளது.
Mahkamah Tinggi Kuala Lumpur menggantung perintah pembekuan aset bernilai £13.2 juta milik isteri bekas Menteri Kewangan, Daim Zainuddin. Permohonan Nayima untuk mencabar perintah itu akan didengar pada 9 Julai dan 1 Ogos di Singapura.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *