போலி முதலீட்டில் RM794,000 இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 20 Jun, 2025
ஜூன் 20,
சமூகவலைத்தின் மூலம் பெறப்பட்ட முதலீட்டு விளம்பரத்தை நம்பி RM794,000 முதலீடு செய்த 47 வயது பெண் தாம் ஏமாற்றப்பட்டதாகப் பினாங்கு செபாராங் பிறாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்டவர் முதலீடு செய்த முதலீட்டு நிறுவனம் அங்கீகரிக்கப்படாத போலி முதலீட்டு நிறுவனம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 11 முதல் ஜூன் 13 வரையில் 47 வயது பெண் வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 7 வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிவர்த்தனை செய்தததாகவும் மொத்தம் RM2 மில்லியன் லாபம் பெற்றதும் லாபம் பெற்ற பணத்தை வெளியெடுக்கும் போது மேலும் RM200,000 கோரப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட 47 வயது பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் முதலீட்டு நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என்றும் அது போலியான வலைத்தலத்தில் இயங்குவதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.
Seorang wanita berusia 47 tahun kerugian RM794,000 selepas mempercayai pelaburan palsu menerusi iklan media sosial. Polis Pulau Pinang mengesahkan syarikat pelaburan itu tidak berdaftar dan beroperasi melalui laman web palsu dari luar negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *