வாகனத்தை மோதிய மோட்டார் சைக்கிள்! பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

top-news

ஜூன் 8,

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது பள்ளி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிற்பகல் 2.45 மணிக்கு கோத்தா திங்கியில் உள்ள Tanjong Balau சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். பலியான மோட்டார் சைக்கிளோட்டிகள் இருவரிடமும் வாகன உரிமம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் 44 வயது பெண் செலுத்திய Suzuki Swift ரக வாகனத்தை மோதியதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட 44 வயது பெண் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த 14 வயதுள்ள இரு மாணவர்களும் Muhammad Adam Haris Al’Hafiz Norezmalshah Jasne, Mohamad Alif Fahimi R Azmi என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக Kota Tinggi மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார்.

Dua pelajar sekolah berusia 14 tahun maut di tempat kejadian selepas motosikal yang mereka tunggang hilang kawalan dan merempuh sebuah kereta Suzuki Swift di Tanjong Balau, Kota Tinggi. Kedua-dua mangsa tiada lesen memandu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *