11 வயது சிறுமி சித்ரவதை! பெற்றோர் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
அதிகமாகக் குறும்பு செய்ததால் பெற்றோர்களால் கொடுரமாகத் தாக்கப்பட்ட 11 வயது சிறுமியின் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பெற்றோரைக் காவல்துறை கைது செய்திருப்பதாக ARAU மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார். சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்ட காணொலி தற்போது நீக்கப்பட்டிருப்பதால் அக்காணொலியை மேலும் பரப்ப வேண்டாம் என Ahmad Mohsin Md Rodi கேட்டுக்கொண்டார். சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் இருவரும் நேற்று இரவு 10.40 மணியளவில் Taman Desa Saujana குடியிருப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் 6 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ARAU மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார்.
சமூகநலத் துறை அதிகாரி ஒருவரிடமிருந்து காவல்துறைக்குப் புகார் கிடைத்த நிலையில் தற்போது 11 வயது சிறுமி சமூகநலத்துறையிடம் பாதுகாப்பாக இருப்பதாகவும் மேலதிக சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ARAU மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார். அதிக குறும்புத்தனத்துடன் நடந்துக் கொண்டதால் 11 வயது சிறுமியின் மீது சுடுநீரை ஊற்றியிருப்பதாகவும் பிரம்பால் அடித்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 11 வயது சிறுமியின் தலை கைகள் கால்கள் ஆகிய பகுதிகளில் முந்தைய காயங்களின் தழும்புகள் இருப்பதால் தொடர்ச்சியாகச் சித்ரவதைக்குற்படுத்தப்பட்டிருக்கலாம் என ARAU மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார்.
Sepasang suami isteri ditahan selepas video penderaan anak perempuan mereka berusia 11 tahun tular di media sosial. Polis mengesahkan mangsa disiram air panas dan dipukul. Mangsa kini di bawah jagaan Jabatan Kebajikan Masyarakat untuk rawatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *