சொகுசு வீட்டில் வெளிநாட்டுப் பெண்கள் உட்பட எண்மர் கைது!

top-news

ஜுன் 22,


காஜாங்கில் உள்ள சொகுசு அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகக் குடியிருப்புவாசிகளிடமிருந்து புகார் பெற்றதும் சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று மாலை தேசிய குடிநுழைவுத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சம்மந்தப்பட்ட சொகுசு அடுக்கு மாடி வீட்டில் 8 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர்களும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் கும்பல் என்றும் பல நாடுகளின் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்ததற்கான ஆதாரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் சீனாவைச் சேர்ந்த 7 பேர் என்றும் அதில் மூவர் இளம்பெண்கள் என்றும் மேலும் ஒருவர் தைவானைச் சேர்ந்த ஆடவர் என்றும் இவர்களுக்கெல்லாம் மேலாளராக அவர் செயல்படுவதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.


Lapan warga asing termasuk tiga wanita ditahan di sebuah kondominium mewah di Kajang kerana terlibat dalam sindiket penipuan dalam talian. Mereka dipercayai menipu pelanggan dari pelbagai negara dan dipercayai diketuai seorang lelaki warga Taiwan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *