8,500 கிலோ அரிசி மூட்டையைக் கடத்திய இளைஞர் கைது!

top-news

ஜூன் 17,


தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவின் PGA அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 8,500 கிலோ எடையிலானக் கடத்தல் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நள்ளிரவு சந்தேகத்திற்குரிய லாரி Kampung bendang Pak Yong சாலையில் பயணிப்பதைக் கண்ட PGA அதிகாரிகள் சம்மந்தப்பட்ட லாரியைச் சோதனையிட்டதாகவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டிலிருந்து லாரி மலேசிய எல்லை பகுதியைக் கடந்து வந்திருப்பதைதயும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

சம்மந்தப்பட்ட லாரியிலிருந்து RM 159,000 மதிப்பிலான அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ததாகவும் லாரி ஓட்டுநரான 23 வயது உள்ளூர் இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தேசிய எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவின் PGA தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் கிளாந்தான் KSPBN துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட 23 வயது உள்ளூர் இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


PGA menahan seorang pemuda tempatan berusia 23 tahun dan merampas 8,500 kg beras seludup bernilai RM159,000 di Kampung Bendang Pak Yong. Beras dibawa masuk tanpa dokumen sah dari luar negara. Rampasan diserahkan kepada KSPBN Kelantan untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *