இளைஞர்களின் நாகரீகமற்ற செயல்! – அன்வாரின் உருவப் பொம்மை எரிப்பு! சபா பி.கே.ஆர் கண்டனம்!

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜூன் 22,
ஊழலுக்கு எதிராகச் சபா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய Gempur Rasuah 2.0 போராட்டத்தில் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim உருவப் பதாகைகள் எரிக்கப்பட்டிருப்பது நாகரீகமற்ற செயல் என சபா மாநில பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தகவல் தொடர்புத் தலைவர் Mohd Nur Hilmie Milus தெரிவித்தார். ஊழலுக்கு எதிராகப் போராடிய அரசியல் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் அன்வார் எனும் போது அவரின் பதாகைகள் எரிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என Mohd Nur Hilmie Milus தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக முறையான ஆவணங்களுடன் இப்போதைய மடானி அரசாங்கம் செயல்பட்டு வருவதை Mohd Nur Hilmie Milus மாணவர்களுக்கு நினைவூட்டினார்.
எழுச்சியோடு எல்லோரும் பேசலாம். நாங்களும் பேசினோம். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒருவரைக் குற்றவாளியாக்க முடியும். இப்போது நாங்கள் அரைகூவல் விடுவதில்லை. மாறாக ஆதாரத்துடன் ஊழல்வாதிகளை அடையாளம் கண்டு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம் என சபா மாநில பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தகவல் தொடர்புத் தலைவர் Mohd Nur Hilmie Milus தெரிவித்தார். நாட்டின் நிர்வாகத்தில் உண்மையான மாற்றங்களைக் கொண்டு வர முனைப்புடன் செயல்படும் தலைவர்களின் உருவப் பதாகைகள் பொதுவில் எரிக்கப்படுவது கண்டனத்திற்குரியது என்றும் பிற்போக்கான இளைஞர்களின் போராட்டம் மக்களிடையே இளைஞர்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும் என்றும் சபா மாநில பி.கே.ஆர் இளைஞர் பிரிவு தகவல் தொடர்புத் தலைவர் Mohd Nur Hilmie Milus தெரிவித்தார்.
PKR Sabah mengecam tindakan mahasiswa membakar patung Perdana Menteri Anwar Ibrahim semasa protes anti-rasuah di Sabah. Ketua Penerangan Pemuda PKR Sabah menyifatkan tindakan itu tidak bertamadun dan boleh merosakkan imej perjuangan anak muda terhadap integriti negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *