லஞ்சம் வாங்கிய 5 காவல் அதிகாரிகள் கைது!

- Sangeetha K Loganathan
- 24 Jun, 2025
ஜூன் 24,
மலாக்காவில் ஒரு பெண்ணிடமிருந்து RM2,000 லஞ்சம் பெற்றதாக 5 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கைது செய்யப்பட்ட 5 காவல் அதிகாரிகளையும் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கும்படி மலாக்கா Ayer Keroh Majistret நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 காவல் அதிகாரிகளும் 26 முதல் 40 வயதுடைய மலாக்கா மாநிலக் காவல் ஆணையத்தின் காவல் அதிகாரிகள் என்பதை மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Adi Supian Shafie உறிதிப்படுத்தினார்.
Jalan Melaka Mall சாலையில் ரோந்து பணியிலிருந்த காவல் அதிகாரிகள் வாகனத்தில் தனியாக இருந்த காதலர்களிடம் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் சோதனையின் போது சம்மந்தப்பட்ட 5 காவல் அதிகாரிகளும் RM4,000 லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் அதன் பின்னர் RM2,000 லஞ்சம் பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட காதலர்கள் கடந்த ஜூன் 19 மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட 5 காவல் அதிகாரிகளையும் கைது செய்ததாக மலாக்கா மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் Adi Supian Shafie தெரிவித்தார்.
Lima anggota polis Melaka ditahan SPRM kerana menerima RM2,000 rasuah daripada pasangan kekasih ketika rondaan. Kesemua mereka direman lima hari untuk siasatan berhubung tuntutan dan penerimaan wang suapan pada 19 Jun lalu di Jalan Melaka Mall.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *