பொதுத்தேர்தலுக்குப் பின் பெரிக்காத்தானுக்கு ஆதரவளித்த 10 பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அம்னோ விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாரிசான் கூட்டணி அமைக்க விரும்பாமல் அமைதியாக இருக்கலாம் என முடிவெடுத்ததாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். பாரிசான் கூட்டணி மொத்தம் 178 நாடாளுமன்றங்களில் போட்டியிட்டு 30 நாடாளுமன்றங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. கடுமையான பின்னடைவைச் சந்திருந்ததால் பெரிக்காத்தானுடன் கூட்டணியில் சேர்ந்தாலும் பக்காத்தானுடன் கூட்டணியில் சேர்ந்தாலும் பாரிசானுக்கு ஆட்சியில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களே மிஞ்சும் என்பதால் பாரிசான் கூட்டணி அமைக்க விருப்பமில்லாமல் அமைதியாகவே இருந்தது.
ஆனால் பக்காத்தானிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்த நிலையில் பாரிசான் அதனை நிராகரித்து வந்தது. அதன் பின்னர் பாரிசானின் மற்ற தலைவர்களின் அறிவுறுத்தலால் பெரிக்காத்தானுடன் கூட்டணியில் சேரலாமா எனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதனால் பெரிக்காத்தானுக்குத் தொடர்ந்து மூன்று முறை, கூட்டணி ஆட்சிக்கான வேண்டுகோள் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டது. ஆனால் பெரிக்காத்தான் அதனை நிராகரித்தது மட்டுமின்றி பாரிசானின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் பெரிக்காத்தானுக்கு ஆதரவளித்திருப்பதாகவும் அதனால் பாரிசான் அதன் நிபந்தனைகளைத் தளர்த்திக்கொள்ளும்படியும் பெரிக்காத்தான் வலியுறுத்தியது.
இதனால் பாரிசான் தலைமையில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தலைமை ஒரு சந்திப்பை நடத்தி, தேர்தல் ஒப்பந்தத்தை நினைவூட்டியது. அதன் பின்னர் மாமன்னரின் முன்னிலையில் பக்காத்தான் பாரிசான் கூட்டணி அமைந்தது என்றும் 2 நாள்கள் கூட்டணிக் குறித்தான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அன்வார் தான் முதலில் பாரிசானைக் கூட்டணிக்கு அழைத்தார் என்பதை அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki சுட்டி
ஜூன் 23,
கடந்த பொதுத்தேர்தலுக்குப் பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாரிசான் கூட்டணி அமைக்க விரும்பாமல் அமைதியாக இருக்கலாம் என முடிவெடுத்ததாக அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். பாரிசான் கூட்டணி மொத்தம் 178 நாடாளுமன்றங்களில் போட்டியிட்டு 30 நாடாளுமன்றங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. கடுமையான பின்னடைவைச் சந்திருந்ததால் பெரிக்காத்தானுடன் கூட்டணியில் சேர்ந்தாலும் பக்காத்தானுடன் கூட்டணியில் சேர்ந்தாலும் பாரிசானுக்கு ஆட்சியில் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களே மிஞ்சும் என்பதால் பாரிசான் கூட்டணி அமைக்க விருப்பமில்லாமல் அமைதியாகவே இருந்தது.
ஆனால் பக்காத்தானிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்த நிலையில் பாரிசான் அதனை நிராகரித்து வந்தது. அதன் பின்னர் பாரிசானின் மற்ற தலைவர்களின் அறிவுறுத்தலால் பெரிக்காத்தானுடன் கூட்டணியில் சேரலாமா எனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதனால் பெரிக்காத்தானுக்குத் தொடர்ந்து மூன்று முறை, கூட்டணி ஆட்சிக்கான வேண்டுகோள் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டது. ஆனால் பெரிக்காத்தான் அதனை நிராகரித்தது மட்டுமின்றி பாரிசானின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் பெரிக்காத்தானுக்கு ஆதரவளித்திருப்பதாகவும் அதனால் பாரிசான் அதன் நிபந்தனைகளைத் தளர்த்திக்கொள்ளும்படியும் பெரிக்காத்தான் வலியுறுத்தியது.
இதனால் பாரிசான் தலைமையில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தலைமை ஒரு சந்திப்பை நடத்தி, தேர்தல் ஒப்பந்தத்தை நினைவூட்டியது. அதன் பின்னர் மாமன்னரின் முன்னிலையில் பக்காத்தான் பாரிசான் கூட்டணி அமைந்தது என்றும் 2 நாள்கள் கூட்டணிக் குறித்தான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அன்வார் தான் முதலில் பாரிசானைக் கூட்டணிக்கு அழைத்தார் என்பதை அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki சுட்டிக்காட்டினார்.
Selepas PRU, Barisan Nasional (BN) awalnya enggan bentuk kerajaan tetapi 10 Ahli Parlimennya beri sokongan peribadi kepada Perikatan Nasional. BN akhirnya bentuk kerajaan perpaduan dengan PH atas titah YDPA, jelas Setiausaha Agung UMNO.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *