நஜீப்பின் விடுதலை! அரசு மேல்முறையீடு செய்யுமா இல்லையா? - Rafizi Ramli கேள்வி!

- Sangeetha K Loganathan
- 20 Jun, 2025
ஜூன் 20,
அரசாங்கத்தின் பல்வீனத்தால் நஜீப் மீதான பணமோசடி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak தன் மீதான பணமோசடி வழக்கிலிருந்து விலக்கு பெற எல்லா உரிமையும் உண்டு. கடந்த 2019 முதலே அவர் RM 27 மில்லியன் SRC International பணமோசடி வழக்கிலிருந்து விலக்கு பெற முயற்சி செய்து வருகிறார். அரசு தரப்பும் 2019 முதலே நஜீப்பிற்கு எதிரான ஆவணங்களைத் திரட்டி வருவதாகத் தெரிவித்திருந்த நிலையில் போதுமான ஆதாரங்களை அரசு தரப்பும் அட்டர்னி ஜெனரலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் நீதிபதி K Muniandy நஜீப்பின் விலக்கு மனுவை (DNAA) ஏற்றுக் கொண்டிருக்கிறார் என Pandan நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார்.
எல்லாம் சட்டப்படி நடந்து முடிந்து விட்டது. இப்போது அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC) மேல்முறையீடு செய்யுமா இல்லையா? அரசாங்கத் தரப்பலிருந்து நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க 6 ஆண்டுகள் போதுமானதாக இல்லையா? நஜீப்பின் RM 27 மில்லியன் SRC International பணமோசடி தொடர்பான ஆதாரங்கள் உண்மையில் அரசுத் தரப்பிடம் இருக்கிறதா இல்லையா என Pandan நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Seri Rafizi Ramli அடுக்கடுக்கானக் கேள்விகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் மன்றத்திடம் முன்வைத்துள்ளார்.
Rafizi Ramli meluahkan kekecewaan terhadap keputusan membebaskan Najib dalam kes SRC. Beliau mempersoalkan kelemahan kerajaan dan sama ada Peguam Negara akan membuat rayuan, serta menyoal ketelusan kerajaan dalam mengemukakan bukti di mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *