அன்வார் மீதான நம்பிக்கையை இழந்ததால் அமைச்சரவையிலிருந்து வெளியேறினேன்! – RAFIZI குற்றச்சாட்டு!

- Sangeetha K Loganathan
- 21 Jun, 2025
ஜூன் 21,
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தற்கும் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகியதற்குமான ஒரே காரணம் பிரதனர் Datuk Seri Anwar Ibrahim தான் என Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். உண்மையில் பி.கே.ஆர் கட்சி உறுப்பினர்களிடையே நம்பிக்கையையும் நல்ல மதிப்பையும் நான் பெற்றிருந்தேன். கடந்த பி.கே.ஆர் கட்சியின் தேர்தலைப் போல இந்த பி.கே.ஆர் தேர்தல் அமையவில்லை என்றும் கட்சியின் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim தனது மகள் Nurul Izzah Anwar கட்சியின் துணைத் தலைவராக வரவேண்டும் என்கிற ஆசை இருப்பதைத் தாம் வெளிப்படையாகக் கண்டதால் தாம் பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி அடைந்ததாக Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கட்சியின் தலைமை பொறுப்புகளில் இல்லாத நான் அமைச்சரவையில் இருந்தாலும் வெறும் பொம்மை அமைச்சராகவே இருக்க நேரிடும். இதனால் அமைச்சரவையில் என் கருத்துக்கு மதிப்பு இருக்காது என்றும் என் ஒருவரால் பொருளாதார அமைச்சின் செயல்பாடுகளும் பின்னடைவை எதிர்நோக்கும் என Datuk Seri Rafizi Ramli விளக்கமளித்தார். Nurul Izzah Anwar வேறு யாரோ அல்ல. அவர் பி.கே.ஆர் கட்சியின் தலைவருடைய மகள். பி.கே.ஆர் கட்சியின் தோற்றுநர் Datuk Seri Dr Wan Azizah Wan Ismail மகள். இவர்கள் இருவருக்குமே என் மீது நம்பிக்கை இல்லாததால் நூருல் இசாவைப் பி.கே.ஆர் துணைத் தலைவர் பதவிக்கு என்னை எதிர்த்து போட்டியிட அனுமதித்தனர் என வருத்தத்துடன் Datuk Seri Rafizi Ramli வெளிப்படையாகத் தெரிவித்தார்.
Datuk Seri Rafizi Ramli mendakwa beliau meletak jawatan sebagai Menteri Ekonomi kerana hilang kepercayaan terhadap Anwar Ibrahim, menyalahkan pengaruh Nurul Izzah dalam PKR sebagai punca kekalahannya dalam pemilihan jawatan Timbalan Presiden parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *