லஞ்சம் பெற்ற காவல் அதிகாரிக்கு 12 மாதங்கள் சிறையும் RM25,000 அபராதம்! – குவாந்தான் நீதிமன்றம்!

top-news

ஜூன் 20,

போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட விசாரணையில் குற்றவாளியிடம் RM5,000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு முன்னதாக நீதிமன்றத்தின் அளித்த தீர்ப்பை இன்று குவாந்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிச் செய்தது. 48 வயது Hasbullah Ali Alias எனும் காவல் ஆணையருக்குக் கடந்த 2023 ஆம் ஆண்டு Sesyen நீதிமன்றம் 12 மாதங்கள் சிறையும் RM25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் முறையீடு செய்த நிலையில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை உறுதிச் செய்துள்ளது.

கடந்த 2018 மே 7, 12.37 மணிக்குக் குவாந்தானில் உள்ள Jalan Beserah உணவகத்தில் போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட ஆடவரிடமிருந்து RM5,000 லஞ்சம் பெற்றதற்காகப் பகாங் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 48 வயது காவல் ஆணையருக்கு எதிரான ஆவணங்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் அவரின் முறையீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாகப் பகாங் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை வழக்கறிஞர் Muhamad Asraf Mohamed Tahir தெரிவித்தார்.


Mahkamah Tinggi Kuantan mengekalkan hukuman penjara 12 bulan dan denda RM25,000 ke atas pegawai polis Hasbullah Ali Alias kerana menerima rasuah RM5,000 daripada suspek kes dadah pada 2018. Rayuan beliau telah ditolak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *