பதவியிலிருந்து விலகிய ரஃபிசி ரம்லிக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் ஜூன் 16: 

பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்து அண்மையில் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகிய ரஃபிசி ரம்லிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்து அவர்  செய்த பங்களிப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த மே 23ஆம் தேதி நடைபெற்ற 2025-2028 தவணைக்கான பிகேஆர்  கட்சியின் உயர் மட்டப் பதவிகளுக்கான  தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வார் மொத்தம் 9,803 வாக்குகளைப் பெற்று ரபிஸியைத் தோற்கடித்து கட்சியின்  துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியின் தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் கட்சியை வலுப்படுத்துவதில் தொடர்ந்து பங்களிப்பேன் என்று ரபிஸி முன்பு கூறியிருந்தார். 

அதே வேளையில் அமைச்சரவையை அவசரமாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை என்றும்,  அமைச்சர் தனது  முடிவை மறுபரிசீலனை செய்வார் என்றும்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  எதிர்பார்த்திருந்தார்
இந்த நிலையில் இன்று எரிசக்தி ஆசியா 2025 மாநாட்டில் பேசிய அன்வார், பொருளாதார அமைச்சு அப்படியே இருக்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.

ரஃபிசிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் சிறப்பாக பணியாற்றினார் என்றும் அன்வார் கூறினார்.
இந்த பொறுப்புகளை எந்த அமைச்சர் அல்லது அமைச்சு ஏற்கும் என்பதை உரிய நேரத்தில் தாமே தீர்மானிக்கப்போவதாக அவர் கூறினார்.

Perdana Menteri Anwar Ibrahim merakamkan penghargaan kepada Rafizi Ramli atas sumbangannya sebagai Menteri Ekonomi. Walaupun kalah dalam pemilihan PKR, Rafizi tetap komited kepada parti. Anwar sahkan tiada rombakan kabinet segera, pengganti diumum pada masa sesuai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *