வேண்டுமென்றே 3 முறை வாகனத்தை மோதி சண்டையிட்ட சாலை பயணி!

- Shan Siva
- 24 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 24: கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் பாருவில் நடந்த சாலை மோதலில் தனது டொயோட்டா ஹைலக்ஸ் வாகனத்தை வைத்து பெரோடுவா ஆக்சியாவை வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் மோதிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
63 வயதான
பாதிக்கப்பட்டவர் ஆக்சியா காரை ஓட்டிச் சென்றபோது, திருப்பத்தைத் தவறவிட்டு மெதுவாகச் சென்றதால் இந்தச் சம்பவம் ஏற்பட்டதாக ஜொகூர் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்துள்ளார்.
பின்னர் சந்தேக
நபர் பாதிக்கப்பட்டவரை முந்திச் சென்று, ஆக்சியாவின் முன் தனது வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை அடுத்து சந்தேக நபர் தனது நான்கு
சக்கர வாகனத்தை ஆக்சியாவில் மூன்று முறை மோதி, பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை சேதப்படுத்தினார் என்று ரவூப் கூறினார்.
சந்தேக நபருக்கு ஏழு கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போதைப் பொருள் சோதனையில் அவர் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
Seorang lelaki ditahan selepas sengaja melanggar Perodua Axia sebanyak tiga kali di Johor Bahru akibat perselisihan jalan raya. Mangsa berusia 63 tahun. Suspek memiliki tujuh rekod jenayah tetapi bebas dadah, menurut polis Johor Selatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *