ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கத் தூதரகத்தின் முன் போராட்டம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 20: ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவை எதிர்த்தும் இன்று மதியம் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுமார் 200 பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.

பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும், குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலுக்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிப்பதைக் கண்டித்தும் அவர்கள் பேரணியாகத் திரண்டு வந்து அமெரிக்க தூதரகம் முன் குவிந்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, மஸ்ஜித் தாபோங் ஹாஜியிலிருந்து தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற அவர்கள், பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, "சுதந்திர பாலஸ்தீனம்", "ஈரான் இஸ்லாமியக் குடியரசு நீடூழி வாழ்க" மற்றும் "ஈரான் பாலஸ்தீனத்துடன் நிற்கிறது" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலித் சமத், பூலாய் எம்பி சுஹைசான் கயாத், மூத்த ஆர்வலர் தியான் சுவா, அரசு சாரா அமைப்பு மந்திரி ஒருங்கிணைப்பாளர் வோங் குகுய் மற்றும் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழுவின் (மாபிம்) தலைவர் முகமது அஸ்மி அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டனர்!

Sekitar 200 orang berhimpun di hadapan Kedutaan AS bagi menyokong Iran dan mengecam sokongan Washington terhadap Israel selepas serangan ke atas Iran. Perhimpunan turut disertai pemimpin politik dan NGO, membawa mesej solidariti terhadap Palestin.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *