கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் வெ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சிக்கியது!

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி)

கோலாலம்பூர், ஜூன் 21-புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் பிரிவும் பெர்லிஸ் மாநில போதைப்பொருள் குற்றப் பிரிவும் இணைந்து இம்மாதம் 17ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கெப்போங்கில் சோதனை மேற்கொண்டதில் ஒரு காரில் இருந்த 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் பிரிவின் இடைக்கால இயக்குநர் டிசிபி மாட் ஸானி முகமட் சலாஹுடின் சே அலி தெரிவித்தார்.

அந்த வாகனத்தில் மேற்கொண்ட சோதனையில் வெ.2லட்சத்து 27ஆயிரத்து 63 மதிப்புள்ள 73.25 கிலோ எடையிலான 70 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கிட்டத்தட்ட 1லட்சத்து 46ஆயிரத்து 492 பேர் உபயோகிக்கக்கூடியது. கைது செய்யப்பட்ட நபர்கள் 33, 38 வயதுடையவர்கள் என்றார் அவர்.

இதுகுறித்து மேற்கொண்ட மேல் விசாரணையில், இந்த போதைப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்குச் சந்தைகளில் விநியோகிப்பதற்காக பெர்லிஸ் எல்லைப் பகுதி வாயிலாக அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போக்குவரத்தாளர்களாகச் செயல்படும் இவர்களுக்கு பல போதைப்பொருள் குற்ற வழக்குகள் உள்ளதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் வெ.1,950 மதிப்புள்ள 2 தங்கத் தோடுகளை போலீசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பலர் தேடப்பட்டு வருவதாகவும் டிசிபி மாட் ஸானி முகமட் சலாஹுடின் சே அலி தெரிவித்தார்.

Dua lelaki ditahan bersama 73.25kg ganja bernilai RM227,063 dalam serbuan di Gua Kelam, Perlis. Dadah itu diseludup dari negara jiran untuk diedar. Suspek memiliki rekod jenayah dadah dan kini ditahan reman tujuh hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *