செத்தியா அலாம் வணிகத்தலத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய ஆடவர் சுட்டுக் கொலை!

- Sangeetha K Loganathan
- 18 Feb, 2025
பிப்ரவரி 18,
செத்தியா அலாமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய ஆடவரைக் காவல் துறையினர் நேற்று கிள்ளானில் உள்ள தங்கும் விடுதியில் கைது செய்யும் போது காவல்துறையினரால் சுட்டுக் கெல்லப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
அதிகாலை 3 மணியளவில் சம்மந்தப்பட்ட ஆடவரைத் தங்கும் விடுதியில் சுற்றி வலைத்து கைது செய்யும் போது அவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதால் தற்காப்பிற்காகக் காவல்துறையினர் அவரைச் சுட்டதாக Datuk Hussein Omar Khan தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட 30 வயது உள்ளூர் ஆடவரிடமிருந்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மீது முன்னமே போதைப்பொருள் வழக்குகளும் குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
Seorang lelaki tempatan berusia 30 tahun ditembak mati oleh polis di Klang selepas melepaskan tembakan ketika cuba ditahan. Suspek sebelum ini menembak di Setia Alam dan memiliki rekod jenayah serta dadah. Polis merampas senjata api dan peluru daripadanya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *