பிகேஆரின் புதிய தலைமைத்துவம் முதல் முறையாக இன்று கூடுகிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 21-

பிகேஆர் கட்சியின் புதிய மத்திய தலைமைத்துவ மன்றம் தனது முதல் கூட்டத்தை இன்று சனிக்கிழமை நடத்த விருக்கிறது. அதன் நிகழ்ச்சி நிரலில் மூன்று உதவித் தலைவர்கள் நியமிக்கப்படுவதும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மூன்று நியமன உதவித் தலைவர் பதவிகளில் ஒன்றில், கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படக் கூடும் என்று, பிகேஆர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

சபா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடிய அவரின் நியமனம், அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. அதில் மூன்று உதவித் தலைவர்கள் நியமிக்கக்கூடும் என்று வெள்ளிக்கிழமை அவர் கூறினார்.

சரவாக்கைச் சேர்ந்த செனட்டர் அபுன் சூய் அன்யிட்டும் உதவித் தலைவாராக நியமிக்கப்படக் கூடிய சூழல் இருந்தது. ஆனால், கட்சியின் நான்கு உதவித் தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டதால், அந்த நியமன வாய்ப்பை அபுன் சூய் இழந்திருக்கின்றார். கட்சியின் மத்திய தலைமைத்துவத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த்உ இருப்பதால், அவரை உதவித் தலைவர் பதவிக்கு நியமிப்பது நியாயமற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அத்தலைவர் தெரிவித்தார்.

சபா மாநில பிகேஆர் தலைவரும் உயர் கல்வி துணை அமைச்சருமான முஸ்தப்பா சக்முட், உதவித் தலைவர் பதவிக்கு நியமிக்கக் கூடியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. கட்சியின் இன்றைய கூட்டத்தில், பிகேஆர் கட்சி பின்பற்றி வரும் பாரம்பரிய அடிப்படையில், அனைத்து மாநிலங்களையும் பிரதிநிதிக்கும் ஒரு சரிநிகரான நிலையில், தலைவர்களின் பிரதிநிதித்துவங்கள் இம்முறையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கு இந்த நியமனங்கள் முக்கிய பங்கை ஆற்றும் என்றும் கூறப்படுகிறது. சபா சட்டமன்றத் தேர்தல் இவ்வாண்டு இறுதியிலும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள்ளும் நடைபெற விருக்கின்றன. கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண், மத்திய அமைச்சர் சாங் லி காங் மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் ஆகியோர் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்றிருந்தனர்.

இவர்களில் அமிருடினும்,ரமணனும், கட்சியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நூருல் இஸ்ஸா அன்வாரின் அணி சார்பிலும் அமினுடினும் சாங் லி காங்கும், துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதில் தோல்வி அடைந்துள்ள ரஃபிஸி ரம்லி அணி சார்பிலும் போட்டியிட்டனர்.

PKR mengadakan mesyuarat pertama Majlis Pimpinan Pusat baharu hari ini, dijangka melantik tiga naib presiden termasuk wakil dari Sabah atau Sarawak. Pelantikan ini penting bagi menghadapi pilihan raya negeri Sabah dan Sarawak yang akan datang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *