அன்வாரின் மக்கள் ஆதரவு சரிவு! - Merdeka Center ஆய்வு!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான மடானி அரசின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்து வருவதாக நாட்டின் முதன்மை ஆய்வு நிறுவனமான Merdeka Center தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த பிரதமர்களுடன் ஒப்பிடும் போது மக்களுக்கு மடானி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக Merdeka Center வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மே 12 முதல் மே 23 வரையில் இந்த ஆய்வு மக்களிடையே மேற்கொள்ளப்பட்டதாக Merdeka Center தெரிவித்துள்ளது.
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim மலேசியா மீண்டும் கடன் பெற கூடாது என்பதற்காக முதலீடுகளின் மூலமாக அரசு துறை நிறுவனங்களின் மூலமாகவும் பெறப்படும் லாபத்தைக் கொண்டு அரசு செலவீனங்களைக் கட்டமைக்கும் திறன் மக்களை ஈர்த்துள்ளதாகவும் மக்களின் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக Merdeka Center தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மக்களில் 55% மக்கள் அன்வார் பொருளாதாரக் கொள்கையால் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் 50% மக்கள் மலேசியாவில் நிர்வாகத்திறன் செயல்படாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதை Merdeka Center சுட்டிக்காட்டியுள்ளது.
Merdeka Center melaporkan penurunan sokongan terhadap Perdana Menteri Anwar Ibrahim, namun dasar ekonomi Kerajaan Madani masih mendapat kepercayaan. Kajian mendapati 55% responden tertarik dengan dasar tersebut walaupun 50% meragui kecekapan pentadbiran kerajaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *