RM141 மில்லியன் நெடுஞ்சாலை ஊழல்! தான் ஸ்ரீயிடம் SPRM 7 மணிநேரங்கள் விசாரணை!

top-news

ஜூன் 19,


நெடுஞ்சாலை கட்டுமான மேம்பாட்டு நிதியான sukuk நிதி ஊழலில் சம்மந்தப்பட்டுள்ள தான் ஸ்ரீயிடம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM 7 மணி நேரங்கள் விசாரணையை மேற்கொண்டதாக அறியப்படுகிறது. காலை 9.10 மணிக்கு தான் ஸ்ரீயின் வீட்டுக்கு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் வாகனத்தில் வந்த அதிகாரிகள் மாலை 4.34 மணிவரையில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். தான் ஸ்ரீயின் வீட்டுப்பகுதியைப் பொதுமக்கள் நெருங்காதபடி காவல்துறையினர் தடுப்புக் காவலை அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. முன்னதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki நெடுஞ்சாலை ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் தான் ஸ்ரீ உடல் நலன் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரின் வீட்டிலேயே SPRM அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜுன் 11, ஜூன் 12 ஆகிய 2 நாள்கள் தான் ஸ்ரீயின் வீட்டை SPRM அதிகாரிகள் சோதனையை மேற்கொண்ட நிலையில் இன்று மூன்றாவது முறையாகச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக சம்மந்தப்பட்ட தான் ஸ்ரீக்குச் சொந்தமான RM141 மில்லியன் மதிப்புள்ள உள்நாட்டுச் சொத்துகளும் RM15 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டுச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tan Sri disiasat selama 7 jam oleh SPRM di kediamannya berkaitan kes rasuah projek jalan raya bernilai RM141 juta menggunakan dana sukuk. Siasatan dilakukan kerana keadaan kesihatannya, manakala aset dalam dan luar negara turut disita.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *