தலைநகரில் 39 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 22 Jun, 2025
ஜூன் 22,
தலைநகரில் தேசிய குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 39 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை 11 மணிக்குத் தலைநகரின் Pulau Indah பகுதியில் உள்ள மறுசுழற்சி தொழில்சாலையில் இச்சோதனையை மேற்கொண்டதாகத் தேசிய குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தொழிற்சாலையில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்றததாகவும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
சோதனையில் மறுசுழற்சி மையத்தில் சட்டவிரோதமாக மின்னணுக் கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் குடிநுழைவுத் துறையினர் கண்டறிந்த நிலையில் உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சின் அதிகாரிகளையும் சோதனையில் இணைத்துக் கொண்டதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். மறுசுழற்சி மையத்தில் இருந்த 42 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆவணங்கள் இல்லாத 39 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 12 பெண்கள் 27 ஆண்கள் என்றும் அனைவரும் 25 முதல் 49 வயதுகுற்பட்டவர்கள் என்றும் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
Jabatan Imigresen menahan 39 warga asing tanpa dokumen sah dalam serbuan di sebuah kilang kitar semula di Pulau Indah, Kuala Lumpur. Mereka didapati bekerja secara haram termasuk menyimpan sisa elektronik. Serbuan melibatkan agensi penguat kuasa lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *