ஒற்றுமை கூட்டணியில் டி.ஏ.பி வழியில் அம்னோ தலையிடாது! – அம்னோ விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
2022 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஒற்றுமைக் கூட்டணி அமைக்கப்பட்ட போது பாரிசான் பக்காத்தான் இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் அதில் முதல் விதி இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்துகளைக் கட்சித் தலைவர்கள் முன்னெடுக்க கூடாது என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki இன்று தெரிவித்தார். பாரிசானின் கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருந்தது. பக்காத்தானில் அமானா, பி.கே.ஆர் கட்சிகளை அம்னோ இயல்பாகக் கடந்து விட்டது. ஆனால் டி.ஏ.பியுடனான பேச்சுவார்த்தை நீண்ட பேச்சுவார்த்தையாக அமைந்ததாக Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
அடிப்படையில் மலாய்க்காரர்களின் சிறப்புச் சலுகைகளுக்கு டி.ஏ.பி எதிரானது. மாலாய்க்காரர்களின் சிறப்புச் சலுகைகளைக் காப்பது தான் அம்னோவின் முதன்மை நோக்கம். இதனால் டி.ஏ.பியுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும் இறுதியாக டி.ஏ.பி வழியில் அம்னோவும் அம்னோவும் வழியில் டி.ஏ.பியும் தலையிடக்கூடாது எனும்படியான ஒப்பந்தங்களை டி.ஏ.பியும் அம்னோவும் ஏற்றுக் கொண்டதாகவும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துகள் ஏதும் கட்சியின் ஒட்டுமொத்த கருத்தாகவும் நிலைப்பாடாகவும் எடுத்துக் கொள்ள கூடாது என்றும், எந்தவொரு கருத்து முரணாக இருந்தாலும் கட்சித் தலைமைகள் பேசி சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முழுமையானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே கட்சிகளின் முடிவுகள் இருக்க வேண்டும் என்றும் தெளிவான ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரே ஒற்றுமை கூட்டணி உருவானது என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki இன்று தெரிவித்தார்.
UMNO menegaskan parti tidak akan campur tangan dalam urusan DAP dalam gabungan kerajaan. Datuk Dr Asyraf Wajdi Dusuki menjelaskan bahawa perjanjian bersama menekankan kepentingan tidak menyentuh sensitiviti Islam dan hak keistimewaan Melayu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *