அன்வாரின் உருவ பதாகையை எரித்த மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 23 Jun, 2025
ஜூன் 23,
ஊழலுக்கு எதிரானப் போராட்டம் எனும் பெயரில் சபா பல்கலைக்கழக மாணவர்களின் அநாகரிகமானச் செயலுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என சபா பொதுப் பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. சபா கனிமவ ஊழலில் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களைப் பிரதமர் அன்வார் பாதுகாப்பதாகவும் அரசியல்வாதிகளின் ஊழலை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மறைப்பதாகவும் சபா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதி பேரணியில் பிரதமர் அன்வாரின் உருவப் பதாகைகள் எரியூட்டப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் ஒரு சில மாணவர்களின் இது மாதிரியானச் செயலால் ஒட்டுமொத்த மாணவர்களின் நிலைப்பாடும் இது என கருதப்பட கூடாது என்றும் சபா பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
பிரதமர் அன்வாரின் உருவப் பதாகைகளை எரித்த மாணவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் காவல்துறையின் விசாரணைக்குப் பல்கலைக்கழகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் குறிப்பிட்ட மாணவர்களின் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சபா பொதுப் பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் எந்தவொரு சபா பல்கலைக்கழக அதிகாரிகளும் நேரடியாகவோ மறைமுகமாகச் சம்மந்தப்படவில்லை என்பதையும் பல்கலைக்கழகம் உறுதிப்படுதியது. பிரதமர் அன்வாரின் உருவப் பதாகையை எரியூட்டிய மாணவர்களுக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதைச் சபா பொதுப்பல்கலைக்கழக நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
Universiti Malaysia Sabah (UMS) menafikan penglibatan institusi dalam tindakan pelajar yang membakar poster Perdana Menteri Anwar dalam demonstrasi antirasuah. UMS menegaskan siasatan polis sedang berlangsung dan mereka akan beri kerjasama penuh.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *