போலி முதலீட்டில் RM 1.7 மில்லியன் இழந்த முதியவர்!

top-news

ஜூன் 17,


சமூகவலைத்தளத்தின் கண்ட முதலீட்டு நிறுவனத்தை நம்பி 67 வயது முதியவர் RM 1.7 மில்லியன் பணத்தை இழந்துள்ளார். பாதிக்கப்பட்ட தனியார் நிறுவன மேலாளரான 67 வயது முதியவர் கடந்த ஜூன் 12 காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் என தெரிய வந்துள்ளதாக Datuk M. Kumar தெரிவித்தார். 

முதலீடு செய்த மொத்த தொகையிலிருந்து 5 முதல் 10 விழுக்காடு வரையில் அன்றாடம் லாபம் பெறலாம் எனும் விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவன மேலாளரான 67 வயது முதியவர் ஏப்ரல் 16 முதல் மே 30 வரையில் 5 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 12 பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டதாகவும் மொத்தமாக அவர் RM1,772,603 பணத்தை இழந்துள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M. Kumar தெரிவித்தார்.


Seorang pengurus syarikat swasta berusia 67 tahun kerugian RM1.7 juta selepas terpedaya dengan skim pelaburan palsu dari syarikat luar negara. Mangsa membuat 12 transaksi ke lima akaun bank antara April hingga Mei sebelum menyedari ditipu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *