கார் கதவு திடீரென திறக்கப்பட்டதில் மோட்டர் சைக்கிளில் வந்த பெண் பலி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 17: ஜாலான் ஈப்போவின் பத்து லீமாவில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பு அருகே நேற்று திடீரென திறக்கப்பட்ட கார் கதவுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு பெண் பரிதாபமாகப் பலியானார் மற்றும் அவரது மகன் காயமடைந்தார்.

மோதலின் தாக்கத்தால் 20 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் விழுந்தார். அதே நேரத்தில் பின்னால் சவாரி செய்த அவரது தாயார் வலது பாதையில் ஒரு லாரியின் கீழ் தூக்கி எறியப்பட்டார் என்று கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் ஜம்சுரி இசா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சம்பந்தப்பட்ட  55 வயது பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது மகனுக்கு கால்கள் மற்றும் கைகளில் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது தாயார் ஜாலான் ஈப்போவிலிருந்து கெப்போங் ரவுண்டானாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மதியம் 12.20 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக ஜம்சுரி கூறினார்.

அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், சாலையின் இடது பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த 35 வயது டொயோட்டா வியோஸ் வாகன ஓட்டுநர் திடீரென தனது கார் கதவைத் திறந்த நிலையில், எதிர்பாரா விதமாக

 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் திறந்த கதவைத் தவிர்க்க முடியாமல் அதன் மீது மோதினார். பின்னர் அவரது தாயார் அருகிலுள்ள பாதையில் கடந்து சென்ற லாரியின் கீழ் தூக்கி எறியப்பட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜம்சூரி கூறினார்!

Seorang wanita maut dan anaknya cedera selepas motosikal mereka melanggar pintu kereta yang dibuka secara tiba-tIBA di Jalan Ipoh. Wanita tersebut tercampak ke laluan lori dan digilis, manakala anaknya cedera ringan. Kes masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *