தகவல் சாதன நிறுவனங்களுக்கு வெ.3 கோடி ஒதுக்கீடு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 16-

இலக்கவியல் உருமாற்றத்தில் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம், தகவல் சாதன நிறுவனங்களுக்கு மூன்று கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திற்கும் தகவல் சாதன ஊழியர்களின் நெறிமுறைக்கும் இடையிலான சமநிலையை உறுதிசெய்ய இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

"தகவல் சாதன ஊழியர்களின் ஆற்றலும் தயாரிப்பும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு நான் பொறுப்பு. உங்கள் செய்திகள் சிறப்பாக இருப்பதால் நான் உங்களை வலுவாக ஆதரிக்கிறேன். எனவே,தொடர்புத்துறை அமைச்சருடன் இதைப் பற்றி கலந்துரையாடினேன். தகவல் சாதன நிறுவனங்கள் மற்றும் நாட்டிற்கு உதவ பெரிய நிதியை ஒதுக்க ஒப்புக் கொள்கிறேன்" என்று நிதி அமைச்சருமான அன்வார் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள உலக வாணிப மையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேசிய தகவல் சாதன ஊழியர் தினம் ஹவானா 2025 நிகழ்ச்சியில் உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Kerajaan memperuntukkan RM30 juta kepada agensi media bagi memastikan mereka tidak ketinggalan dalam transformasi digital. Perdana Menteri Anwar Ibrahim berkata dana ini bantu seimbangkan kemajuan AI dengan etika kerja media dan memperkukuh produktiviti wartawan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *