சையத் சாதிக் விடுதலை விவகாரம்... AGC மேல் முறையீடு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 26: அர்மடா நிதியுடன் தொடர்புடைய குற்றவியல் நம்பிக்கை மீறல், முறைகேடு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானை விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சட்டத்துறை தலைமை அலுவலகமான AGC அதிகாரப்பூர்வமாக மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்துள்ளது.

நேற்று வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தும் வகையில், AGC இன்று ஓர் அறிக்கையில் மேல்முறையீட்டை உறுதிப்படுத்தியது.

மேல்முறையீட்டு செயல்முறை, உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கும் ஒரு நிலையான சட்ட நடைமுறை என்றும், எந்தவொரு தரப்பினருக்கும் எதிரான சார்புடையதாக இது இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து வரும் சட்ட சிக்கல்கள் கூட்டரசு நீதிமன்றத்தால் முடிவாக தீர்க்கப்படுவதை மேல்முறையீடு உறுதி செய்கிறது.  நீதி மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை நிலைநிறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, நீதிபதிகள் டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம், டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நூரின் பதருதீன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் குழு, சையத் சாதிக்கின் தண்டனையை ஒருமனதாக ரத்து செய்து, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி சைட் சாடிக்கை விடுவித்தது.

கடந்த 2023 நவம்பரில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் சையத் சாதிக்கிற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை, இரண்டு பிரம்படிகள் மற்றும் RM10 மில்லியன் அபராதம் விதித்தது!

Jabatan Peguam Negara memfailkan rayuan terhadap keputusan Mahkamah Rayuan yang membebaskan Syed Saddiq daripada tuduhan pecah amanah dan rasuah. AGC menegaskan proses ini bukan berat sebelah dan penting untuk semakan undang-undang oleh Mahkamah Persekutuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *