அம்பாங்கில் மரம் விழுந்து 4 வாகனங்கள் சேதம்!

top-news

பிப்ரவரி 17,

அம்பாங்கில் உள்ள Taman Pandan Perdana பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் 4 வாகனங்கள் சேதமடைந்தாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். மாலை 4.30 மணிக்குப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்புக் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த மரங்களை அப்புறப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மரம் விழுந்ததில் Toyota Avanza, Nissan Sylphy, Hyundai Getz, Proton Satria ஆகிய 4 வாகனங்கள் சேதமடைந்ததாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் மரங்களின் கிளைகள் விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Empat kenderaan mengalami kerosakan selepas dihempap pokok tumbang akibat cuaca buruk di Taman Pandan Perdana, Ampang. Tiada kemalangan jiwa dilaporkan dan kerja-kerja mengalihkan pokok sedang dijalankan. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *