அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரஃபிஸி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் , மே 28: பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வியடைந்ததை அடுத்து, ரஃபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

னது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ராஜினாமா ஜூன் 17 முதல் அமலுக்கு வரும். இன்று முதல் ஜூன் 16 ஆம் தேதி வரை தனது வருடாந்திர விடுப்பின் மீதமுள்ள பகுதியை தாம் பயன்படுத்துவேன் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பிகேஆர் தேர்தலுக்கு முன்பு, பிகேஆரின் துணைத் தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படத் தவறினால், பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்கமான எம்.பி.யாக மீண்டும் செயல்படுவேன் என்று ரஃபிஸி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *