பாலியல் வழக்கில் பாஸ் கட்சியின் AHLI MAJLIS கைது!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
சலவை கடையில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கோலா கிராய் நகராண்மைக் கழக உறுப்பினரும் கோலா கிராய் பாஸ் கட்சியின் இந்தியர் நலன்பிரிவுத் தலைவருமான 47 வயது Muhammad Jaya Murugan Abdullah கைது செய்யப்பட்டார், பாதிக்கப்பட்ட 29 வயது இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று Sesyen நீதிமன்றத்தில் Muhammad Jaya Murugan Abdullah தன் மீதானக் குற்றத்தை மறுத்து நீதிமன்ற விசாரணையைக் கோரினார். மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஜாமின் மனுவையும் Muhammad Jaya Murugan Abdullah தாக்கல் செய்தார்.
கைது செய்யப்பட்ட Muhammad Jaya Murugan Abdullah கோலா கிராய் இந்தியர் சமூகத் தலைவராகவும் நகராண்மைக் கழக உறுப்பினராகவும் இருப்பதால் 12 குழந்தைகளைப் பாதுகாத்து வருவதால் ஜாமின் கோரிக்கையை Sesyen நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும் இரு நபர் உத்தரவாதத்துடன் RM15,000 ஜாமின் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை ஜூலை 15 தொடங்கும் என்பதாகவும் பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணுக்கு எந்தவொரு தொந்தரவும் கொடுக்க கூடாது என குற்றம் சாட்டப்பட்ட கோலா கிராய் நகராண்மைக் கழக உறுப்பினரும் கோலா கிராய் பாஸ் கட்சியின் இந்தியர் நலன்பிரிவுத் தலைவருமான 47 வயது Muhammad Jaya Murugan Abdullahக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Ahli Majlis Kuala Krai merangkap Ketua Biro Kebajikan India PAS, Muhammad Jaya Murugan Abdullah, didakwa atas tuduhan gangguan seksual terhadap wanita berusia 29 tahun di kedai dobi. Beliau mengaku tidak bersalah dan dibebaskan dengan jaminan RM15,000. Perbicaraan bermula 15 Julai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *