அத்துமீறல் நடவடிக்கையால் ஜாலான் பண்டார் விவசாய நிலம் சீல் வைப்பு!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், ஜூன் 15-

இங்கு, தெலுக் பங்லீமா காராங் ஜாலான் பண்டாரில் லோட் 2437 என்ற எண் பதிவு கொண்ட விவசாய நிலத்தில் எந்த அனுமதியும் பெறப்படாத நிலையில் சம்பந்தமே இல்லாத ஒரு தரப்பினர் அத்து மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கிடைக்கப் பெற்றப் புகாரைத் தொடர்ந்து கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உத்தரவுபடி தமது குழுவினருடன் நேரில் சென்று விவசாய நிலப்பகுதி சீல் வைக்கப்பட்டதாக அமலாக்கப் பிரிவின் உயர் நிலை அதிகாரி ரஷிட் ரஹிம் தெரிவித்தார்.

கிள்ளான், தாமான் பாயு பெர்டானாவில் இருக்கும் ஹிம் மெரின் செண்டரியான் பெர்ஹாட் என்ற ட் என்ற நிறுவனம் பெயரில் இந்த நிலம் வாங்கப்பட்டு பதிவும் செய்யப் பட்டுள்ளதால் இந்த விவசாய நிலத்தில் சில அநாமதேயப் பேர்வழிகளின் பல்வேறு தவறான நடவடிக்கைகள் தொடர்வாகத் கிடைக்கப் பெற்றப் புகாரின் அடிப்படையில் இப்பகுதி நில நுழைவாயிலில் மஞ்சள் நிற துணி கட்டி சீல் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பகுதியில் தொடர்ந்து மேற்கொண்டு வரும்
அந்நியரின் அத்துமீறல் நடவடிக்கைகள் இனி தொடரக் கூடாது என்பதால் இந்தத் துரித பணிகளை அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 1.6313 ஹெக்டர் நிலப் பரப்பைக் கொண்ட விவசாய நிலத்தில் ரப்பர் மரக் கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ரஷிட் கூறினார்.இந்த நடவடிக்கையில் முபின், இஸாட், ஜூபிர் மற்றும் அமார் ஆகிய நால்வரும் தமக்கு துணையாக இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அவர் தெரிவித்தார்.

Pihak berkuasa MBSA telah menyita tanah pertanian di Teluk Panglima Garang kerana pencerobohan tanpa kebenaran oleh pihak tidak berkaitan. Tanah milik syarikat sah itu telah dipasang kain kuning sebagai tanda larangan. Tindakan tegas diambil bagi mengelak pencerobohan berulang.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *