சுங்கை தீமா இந்தியர்கள் தனியான நிலப்பட்டா பெறுவதற்கு சான்றளித்தார் வசந்தி!

- Muthu Kumar
- 15 Jun, 2025
(டிகே.மூர்த்தி)
ஊத்தான் மெலிந்தாங், ஜூன் 15-
இங்குள்ள ஜாலான் பெர்ரியில் அரசாங்க நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் குறையாமல் குடியிருக்கும் இந்தியக் குடும்பங்கள், தொடர்ந்து அதே இடத்தில் குடியிருப்பதற்கு அரசாங்கம் வழங்கிய தற்காலிக (TO.L) என்னும் அனுமதி
பெற்றிருந்தனர்.
நிலத்திற்குரிய தற்காலிகக் கட்டணத்தை ஆண்டுதோறும் நில அலுவகத்திற்கு முறையாக செலுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த வாரம் நடைபெற்ற பாகான் டத்தோ நில அலுவலகக் கூட்டத்தில் இந்த விவகாரம் வெளிப்படுத்தப்பட்டது என சட்ட மன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய மகளிர் உதவித் தலைவருமான வசந்தி சின்னசாமி கூறினார்.
குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று அரசாங்கம் விரைவில் கடிதம் மூலம் அறிவிக்க தயார்படுத்தி வருகிறது. தற்காலிக (T.O.L) கட்டணம் என்பது இந்த ஆண்டே இறுதி ஆண்டு என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடுத்த கட்டம் என்பது, நிலத்திற்கான தனியான நிரந்தரப் பட்டா கொடுப்பதற்குரிய அங்கீகாரப் பாரங்கள் வழங்கப்படவும், குறிப்பிட்ட பாரங்களை முறையாகப் பூர்த்தி செய்வதுடன், நில அலுவலக அதிகாரியிடம் அப்பாரங்களை வழங்குவதற்காகச் கங்கை தீமா மண்டபத்தில் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறுகையில், அரசு நிலத்தைப் பயன்படுத்துவதற்கு
விதிக்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதிக்கான கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என்று வசந்தி மீண்டும் நினைவுறுத்தினார்.
தவிர இந்த வட்டாரத்தில் உள்ள கம்போங் முத்தியாரா, கம்போங் புஸ்பா மற்றும் கம்போங் காமாட்சி என்னும் இந்த 3 கிராமங்களில் இந்தியர்கள் சொந்த நிலத்தில் குடியிருக்கின்றனர். ஆனால், இதுநாள் வரையில் தனியான நிலப்பட்டாவுக்கு முயற்சி
செய்தனரா என்பது கேள்வி அல்ல. சட்டமன்ற உறுப்பினர் என்னும் ரீதியில் மக்கள் நலனுக்காக எனது பங்கினை ஆற்றுவதில் தாம் சளைக்கப் போவதில்லை என்றார் அவர்.அதன்படி, முதல் கட்டமாக நிலத்தை அளக்கும் பணி ஆரம்பிக்கப்படும். இதற்கு குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு என்பது முக்கியமாக மக்கள் சேவை மையம் எதிர்பார்க்கிறது.
உங்களுக்காக நாங்கள். எங்களுக்காக நீங்கள் என்பது மறுக்க முடியாத விசயமாகும். எப்போது, ஒவ்வொரு வீட்டுக்கும் தனியான நிலப்பட்டா கிடைக்கப்பெறும் சூழ்நிலையில், அந்த நிலத்தின் மதிப்பு இன்றைய சந்தை விலையில் பன்மடங்கு உயரும் என்பதை மறுப்பதற்கு இல்லை என வசந்தி விவரித்தார்.
இந்த 3 கிராமங்களுக்கு தனியான நிலப்பட்டா வழங்குவதற்கு கிராமத்து தலைவரும், பாகான் டத்தோ தொகுதி பிகேஆர் உதவித் தலைவருமான அருள்பிரகாசம் பெருமாள் உறுதுணையாக உள்ளார் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
Beberapa keluarga India yang menetap lebih 50 tahun di tanah kerajaan di Jalan Peri, Uthang Melintang, menerima notis bayaran tunggakan TOL. Vasanthi Chinnasamy menegaskan pentingnya menjelaskan bayaran untuk kelayakan memiliki geran hak milik tetap.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *