ஜூன் 22இல் பணி ஓய்வு உறுதிப்படுத்தினார் ரஸாருடின்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 16

தேசிய போலீஸ் படைத் தலைவரின் பணி ஒப்பந்த தவணை காலம் இம்மாதம் 22ஆம் தேதி முடிவடைய விருப்பதை, அதன் நடப்புத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் தொடர்பில் நேற்று அவருடன் தொடர்பு கொண்டபோது இதை அவர் உறுதிப்படுத்தியதாக பெர்னாமா தெரிவித்தது.
டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி பணி ஓய்வுப் பெற்ற பின்னர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி ரஸாருடின் நாட்டின் 14 ஆவது தேசிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

சிலாங்கூர், டெங்கிலில் கடந்த 1963ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பிறந்த அவர், கடந்த
1984ஆம் ஆண்டில் கெடா போலீஸ் தலைமையகத்தில் ஒரு விசாரணை அதிகாரியாக போலீஸ் பணியைத் தொடங்கினார்.அதன் பின்னர் அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து பினாங்கு மற்றும் சபா மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டார்.பேராக் மாநில போலீஸ் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு அம்மாநிலத்தின் துணை போலீஸ் தலைவராக பணியாற்றினார்.

தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரஸாருடின் கடந்த 2021 தொடங்கி 2023ஆம் ஆண்டு வரையில், புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றச் செயல் விசாரணைப் பிரிவு இயக்குநராக இருந்தார்.

Ketua Polis Negara, Tan Sri Razarudin Husain mengesahkan kontraknya akan tamat pada 22 Jun ini. Beliau dilantik pada Jun 2023 selepas persaraan Tan Sri Acryl Sani, dan berkhidmat dalam pelbagai jawatan penting sejak menyertai polis pada 1984.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *