குழந்தைகள் காப்பகத்தில் 10 மாதக் குழந்தை உயிரிழப்பு! – காவல்துறை விசாரணை!

top-news

ஜூன் 15,


சுங்கை பூலோவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்ததாகச் சமூக வலைத்தளத்தில் பரவும் செய்தி உண்மை தான் என்றும் குழந்தையிந் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் SUNGAI BULOH மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார். கடந்த வெள்ளிக் கிழமை UITM அரசு மருத்துவமனையிலிருந்து இரவு 10.42 மணிக்குக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து குழந்தை உயிரிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் புகார் கிடைத்ததாக SUNGAI BULOH மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.

மாலை 5 மணியளவில்10 மாதப் பெண் குழந்தையைக் குளிப்பாட்டுவதற்காகக் குளியறைக்குக் கொண்டு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு ஊழியரின் கவனக் குறைவால் குழந்தை உயிரிழந்திருப்பதாகவும் மாலை 5.40 மணிக்கு உயிரிழந்த குழந்தையின் தாயாருக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் குழந்தை உயிரிழந்ததை UITM மருத்துவமனையில் உறுதிச் செய்யப்பட்டதாகவும் SUNGAI BULOH மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார். தற்போது விசாரணை இன்னும் முழுமை பெறாத நிலையில் எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என SUNGAI BULOH மாவட்டக் காவல் ஆணையர் Mohd Hafiz Muhammad Nor தெரிவித்தார்.


Seorang bayi perempuan berusia 10 bulan meninggal dunia di sebuah pusat jagaan kanak-kanak di Sungai Buloh akibat kecuaian penjaga semasa memandikan mangsa. Polis Sungai Buloh sedang menjalankan siasatan lanjut dan tiada tangkapan dibuat setakat ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *