லாரியும் காரும் மோதிய விபத்தில் இருவர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
குவாந்தானிலிருந்து மாரான் செல்லும் சாலையில் லாரியும் காரும் நேரெதிரில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். கம்போங் பத்து 12 சாலையில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஜொகூரைச் சேர்ந்த 24 வயது M Jayavarman எனும் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் Kampung Belimbing பகுதியைச் சேர்ந்த 57 வயது Nurihan Mustapa எனும் பெண் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காரில் பயணித்த மேலும் இருவர் குவாந்தான் Tengku Ampuan Afzan (HTAA) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dua maut dan dua cedera dalam kemalangan melibatkan lori dan kereta di Jalan Kuantan-Maran. Pemandu lori, M Jayavarman, meninggal dunia di hospital, manakala pemandu kereta, Nurihan Mustapa, maut di tempat kejadian. Polis Kuantan masih menyiasat punca kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *