அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை! அன்வாருக்கு நன்றி! - மகாதீர்

- Shan Siva
- 10 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 10: இன்று 100 வயதை எட்டிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது, தான் வகித்த அதிகாரம் அல்லது பதவிகளுக்காக நினைவுகூரப்படுவதை விரும்பவில்லை என்றும், மாறாக மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவதையும் விரும்புவதாகக் கூறினார்.
உயர் பதவியில்
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்க எப்போதும் தன்னால் முடிந்த
அனைத்தையும் செய்ததாகவும், மக்களுக்கு சேவை
செய்ய மட்டுமே விரும்புவதாகவும் கூறினார்.
தாம் வகித்த அதிகாரத்திற்காக நினைவுகூரப்படுவதை
விரும்பவில்லை. தவறான செயலைச் செய்ததாகத் தாம் கண்டனம் செய்யப்பட விரும்பவில்லை என்றும்
அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு சிறந்த
வாழ்க்கையை வழங்குவதே தமக்கு முக்கியம் என்று அவர் கூறினார்.
1981 இல் தனது முதல்
நியமனத்தை ஒரு தற்செயல் நிகழ்வு என்று விவரித்துள்ள அவர், பிரதமராக வேண்டும் என்று ஒருபோதும் திட்டமிடவில்லை என்று
கூறினார்.
தாம் ஒருபோதும் பிரதமராக வேண்டும் என்று பணியாற்றவில்லை.
அந்தப் பதவியை வகிப்பேன் என்று கூட நினைக்கவில்லை. இருப்பினும், அப்போது நிலைமை என்னை சரியான நேரத்தில் மற்றும்
இடத்தில் வைத்தது, நான்
நியமிக்கப்பட்டேன் என்று தெரிவித்தார்.
அது என்
வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று அவர் கூறினார்.
பிரதமர் அன்வார்
இப்ராஹிம் உட்பட இன்று தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பிய நலம்
விரும்பிகளுக்கும் மகாதிர் நன்றி தெரிவித்தார்.
100வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமரிடமிருந்து எனக்கு ஒரு குறிப்பு வந்தது. அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன் என்று அவர் கூறினார்!
Dr. Mahathir Mohamad, bekas Perdana Menteri, menyambut ulang tahun ke-100 hari ini. Beliau menyatakan tidak mahu dikenang kerana jawatan, tetapi atas sumbangannya kepada pembangunan negara. Beliau juga berterima kasih atas ucapan hari jadi, termasuk dari Perdana Menteri Anwar Ibrahim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *