பெட்ரோல் நிலைய கழிப்பறையில் குழந்தையின் சடலம்!

top-news
FREE WEBSITE AD

பொந்தியான், ஜூன் 15-

அப்பி அப்பியிலுள்ள ஜாலான் பொந்தியான்-பெனுட் பெட்ரோல் நிலைய கழிப்பறை குழியில் நல்ல நிலையிலுள்ள குழந்தையின் சடலத்தைக் கண்டுபிடித்ததில் அத்தலத்தின் தொழிலாளருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து அத்தொழிலாளர் போலீசைத் தொடர்பு கொண்டதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்பி முகமட் ஷோஃபி தாயிப் தெரிவித்தார்.

அக்குழந்தையின் சடலம் ஜொகூர்பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையின் பிறப்பை மறைத்து வைக்கும் நோக்கில் குழந்தையை ஒளித்து வைத்ததால் இச்சம்பவம் 318ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்டவிசாரணைப்படி இச்சம்பவத்தில் ஒரு பெண் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது எஸ்பி முகமட் ஷோஃபி தாயிப் குறிப்பிட்டார்.

Seorang pekerja stesen minyak di Pontian terkejut menemui mayat bayi dalam tangki tandas. Polis sedang menyiasat kes ini di bawah Seksyen 318 Kanun Keseksaan. Seorang wanita disyaki terlibat dan kini dirawat di hospital.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *