33 வெளிநாட்டினர்கள் கைது! – BENTONG

top-news

ஜூன் 15,


சட்டவிரோதமாக முறையான ஆவணங்கள் இல்லாமல் வேலைக்கு அமர்த்தப்பட்ட 33 வெளிநாட்டினர்களைப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்தது. நேற்று நண்பகல் 12 மணி ம் உதல் 2 மணிவரையில் பெந்தோங்கில் இயங்கி வந்த ஒரு தனியார் நிறுவனத்தில் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் சோதனையில் 33 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Nursafariza Ihsan தெரிவித்தார். 

18 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட இந்நடவடிக்கையில் 46 தொழிலாளர்களிடம் தனித் தனியாகச் சோதனையை மேற்கொண்ட நிலையில் போலி அடையாள அட்டைகளுடன் 33 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Nursafariza Ihsan தெரிவித்தார். சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மேலாளர் என நம்பப்படும் உள்ளூர் ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் பகாங் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Nursafariza Ihsan தெரிவித்தார்.


Jabatan Imigresen Pahang menahan 33 warga asing yang bekerja tanpa dokumen sah dalam serbuan di sebuah syarikat swasta di Bentong. Seramai 46 pekerja diperiksa. Kesemua suspek kini ditahan reman 14 hari manakala pengurus syarikat turut disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *