பெர்மாத்தாங் தமிழ்ப்பள்ளியில் ஆங்கில பாடத்திட்ட “இ அட்டை” அறிமுக விழா!

- Muthu Kumar
- 15 Jun, 2025
(ஆர்.ரமணி)
புக்கிட் மெர்தாஜம், ஜூன் 15-
பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில், மிக்ரோன் நிறுவனத்தின் ஆதரவுடன், மாணவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் “இ அட்டை” எனும் ஆங்கில மொழி பாடத்திட்டத்தைக் குறித்த விழா, பள்ளியின் எழில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவை, மிக்ரோன் நிறுவனத்தின் ஆசிய நாடுகளுக்கான மனித வள இயக்குநர் டத்தோ மூர்த்தி முருகையா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் உரையாற்றுகையில், "ஆங்கிலம் இன்று அனைத்துலகத் தொடர்புக்கு அவசியமான மொழியாக
இருக்கிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இம்மொழியில் புலமை பெறுவது அவசியமாகும் என்றும் ஆங்கில மொழியை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இ-அட்டை வடிவமைக்கப்பட்டு உள்ளது" என்றார்.பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்தரன், மிக்ரோன் நிறுவனத்தின் ஒத்துழைப்புக்கு நன்றியினைத் தெரிவித்தார். குறிப்பாக டத்தோ மூர்த்தி முருகையாவின் நேரடி பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதாக அவர் கூறினார்.
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் துணை இயக்குநர் சக்திவேல் அறிவானந்தம் நிகழ்ச்சியில் உரையாற்றி, “மிக்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கிலத்
திறனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது வரவேற்கத்தக்க முன்னேற்றம்” என கருத்து தெரிவித்தார்.
தலைமையாசிரியர் கோகிலவாணி, “இ அட்டையின் உதவியுடன் மாணவர்கள் ஆங்கில பாடங்களை எளிதாகவும் ஆழமாகவும் புரிந்து கற்க முடியும்.இது பள்ளியின் தரத்தையும் உயர்த்தும்” என மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சண்முகம், முன்னாள் தலைமையாசிரியர் வீராசாமி, பினாங்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலு ஆகியோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் "இ அட்டை"யை டத்தோ மூர்த்தி முருகையா ரிப்பன் வெட்டி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய பாடத்திட்டங்கள் மாணவர்களின் மொழித் திறனையும் எதிர்காலத்தையும் வளமாக்கும் வழிகாட்டிகளாக அமையும்.
Satu majlis pelancaran program "e-Attai" telah diadakan di Sekolah Tamil Permatang Tinggi dengan sokongan syarikat Micron. Program ini bertujuan meningkatkan penguasaan bahasa Inggeris murid melalui pendekatan digital interaktif yang disokong oleh pelbagai pihak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *