அழுகிய நிலையில் தம்பதியர் உடல் மீட்பு!

top-news

ஜூன் 15,


பூட்டியிருந்த வீட்டிலிருந்து தம்பதியர் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நண்பகல் 12.20 மணிக்குச் சம்மந்தப்பட்ட வீட்டின் அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் புகார் அளித்த நிலையில் வீட்டைச் சோதனையிட்டதில் வயதான தம்பதியரின் உடல் மீட்கப்பட்டதாக RAUB மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார். ரவூப் கம்போங் சுங்கை ருவானில் உள்ள வீட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடமாட்டம் இல்லாதததாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டின் சமையலைறையில் அவர்களிந் உடல் இறந்த நிலையில் கிடந்ததாகவும் அவர்கள் இறந்து ஒரு வாரத்திற்கு மேலாகியிருக்கும் என தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 75 வயது Woh Tong Seng 73 வயது Loh Kam Ngo எனும் கணவன் மனைவி என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ரவூப் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் RAUB மாவட்டக் காவல் ஆணையர் Mohd Shahril Abdul Rahman தெரிவித்தார்.


Sepasang suami isteri warga emas berusia 75 dan 73 tahun ditemui meninggal dunia dalam keadaan reput di rumah mereka di Kampung Sungai Ruan, Raub. Mayat ditemui selepas jiran mengadu bau busuk. Polis percaya pasangan itu meninggal lebih seminggu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *