போலி முதலீட்டில் RM389,000 இழந்த தொழில்சாலை மேலாளர்!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
சமூக ஊடகத்தில் கண்டறியப்பட்ட முதலீட்டு திட்டத்தால் 40 வயதுடைய தொழில்சாலை மேலாளர் RM389,000 பணத்தை இழந்துள்ளதாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 19 இல் முகநூலில் P3X எனும் முதலீட்டு விளம்பரத்தைக் கண்டதும் சம்மந்தப்பட்ட செயலியைப் பதிவிறக்கம் செய்து முதலீட்டுக்கான விண்ணப்பததைச் செய்ததாக 40 வயது பாதிக்கப்பட்ட தொழில்சாலை மேலாளர் புகார் அளித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கிலும் தனியார் வங்கிக் கணக்குகளுக்கும் தனது சேமிப்புப் பணமான RM389,000 தொகையை முதலீடு செய்ததும் அடுத்த நாளே P3X எனும் செயலி பயன்பாட்டில் இல்லை என்றும் செயலிழந்ததாகவும் பாதிக்கப்பட்ட 40 வயது தொழில்சாலை மேலாளர் நேற்று நண்பகல் 2.50 மணிக்கு நீலாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டிருப்பதாக நீலாய் மாவட்டக் காவல் ஆணையர் Abdul Malik Hasim தெரிவித்தார்.
Seorang pengurus kilang berusia 40 tahun kerugian RM389,000 selepas terpedaya dengan skim pelaburan palsu "P3X" yang ditemui di Facebook. Aplikasi tersebut hilang sehari selepas pelaburan dibuat. Polis Nilai kini menyiasat dan membekukan akaun terlibat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *