அரசியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

- Sangeetha K Loganathan
- 16 Jun, 2025
ஜூன் 16,
எதிர்வரும் 19 ஜூன் 2025 வியாழக்கிழமை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இந்திய ஆய்வியல் மாணவர் கழகமும் மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு குறித்து கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளனர். 19 ஜூன் 2025 பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் Dewan Kuliah E, Fakulti Sastera dan Sains Sosial, Universiti Malaya நடைபெறுகிறது.
இக்கலந்துரையாடலில் மூத்த அரசியல்வாதியும் மேனாள் துணை அமைச்சருமான Tan Sri Dato' Dr. க.குமரன், மேனாள் அமைச்சரும் மேனாள் ம.இ.கா தலைவருமான Tan Sri Datuk Seri Dr.S.Subramaniam, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் இரவீந்திரன் மாரையா ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவர்களும் பங்கேற்கவுள்ளனர். இப்பயன்மிக்க கருத்தரங்கில் பொதுமக்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Universiti Malaya akan menganjurkan seminar kesedaran politik masyarakat India Malaysia pada 19 Jun 2025. Antara panelis ialah Tan Sri Dr. K. Kumaran, Tan Sri Dr. S. Subramaniam dan Dr. Ravindran Mariah. Orang ramai dijemput hadir ke sesi ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *