ஆடவரைக் கத்தியால் குத்திய மியன்மார் பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 15 Jun, 2025
ஜூன் 15,
பெண் ஒருவர் கடைக்காரரைக் கத்தியால் சரமாரியாகத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகக் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பெண் 39 வயதான மியன்மார் நாட்டைச் சேர்ந்த UNHCR குடியேறி என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 47 வயது கடையின் உரிமையாளருக்குக் கை கால் கழுத்து பகுதியில் கீறல்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.
முன்னதாகப் பெண் ஒருவர் கடையில் திருடும் போது பொதுமக்களால் தாக்கப்பட்டதாகக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியது. உண்மையில் சம்மந்தப்பட்ட கடைக்காரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையிலிருந்த சீவல் கத்தியைக் கொண்டு மியான்மார் பெண் கடைக்காரரைத் தாக்கியதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார். கைப்பேசியில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தொடர்பாகக் கைப்பேசிக் கடையின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் வாக்குவாதத்தில் பொறுமை இழந்து கத்தியால் தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
Seorang wanita warga Myanmar berusia 39 tahun ditahan selepas menikam pemilik kedai telefon dalam pertengkaran berkaitan masalah telefon di Kuantan. Mangsa lelaki berusia 47 tahun mengalami kecederaan di tangan, kaki dan leher. Video kejadian tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *