இந்தோனேசியா கடலில் நில நடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் இல்லை

- Shan Siva
- 10 May, 2025
கோலாலம்பூர், மே 10: இந்தோனேசியாவின் பாண்டா கடலில் இன்று காலை 6.45
மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் அம்போனுக்கு தெற்கே சுமார் 413 கி.மீ தொலைவில் 171 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *