ECRL 2027 -ல் தொடங்கும்போது 1800 தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்! - அந்தோணி லோக்

- Shan Siva
- 06 May, 2025
கோலாலம்பூர் மே 6
: ECRL எனப்படும் கிழக்கு கடற்கரை
ரயில் இணைப்பு ஜனவரி 2027 இல் செயல்படத்
தொடங்கும் போது சுமார் 1,800 தொழிலாளர்கள்
தேவைப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று தெரிவித்தார்.
இந்த பணியாளர்களில் குறைந்தது 80 விழுக்காட்டினர் மலேசியர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நிர்ணயித்துள்ளதாக அவர்
கூறினார்.
இந்தத் தொழிலாளர்கள் ECRL இன் சீரான மற்றும் திறமையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய தொழிலாளர்கள் உட்பட பல்வேறு திறன் நிலைகளில் இருந்து வருவார்கள் என்று ECRL செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O&M) கட்டத்திற்கான வேலை வாய்ப்புகள் முயற்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்!
Sebanyak 1,800 pekerja diperlukan apabila projek ECRL mula beroperasi pada Januari 2027. Menteri Pengangkutan, Anthony Loke menyatakan bahawa 80% pekerja mesti terdiri daripada rakyat Malaysia bagi memastikan operasi dan penyelenggaraan berjalan lancar dan berkesan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *